الوصف
مقالة باللغة التاميلية تحتوي على الأعمال الصالحات التي يسن للمؤمن أن يعملها في الدنيا لتعود عليه بالثواب بعد الموت، كما ورد في القرآن والسنة النبوية.
பின்தொடரும் நல்லறங்கள்
] தமிழ் – Tamil –[ تاميلي
M.S.M. இம்தியாஸ் யூசுப்
2013 - 1434
الصالحات الجاريات بعد الموت
« باللغة التاميلية »
إمتياز يوسف السلفي
2013 - 1434
பின்தொடரும் நல்லறங்கள்
எம்.எஸ்.எம்.இம்தியாஸ் யூசுப் ஸலபி
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ
உங்களில் அழகிய செயலுடையவர் யார் என்று உங்களைச் சோதிப்பதற்காக அவனே மரணத்தையும் வாழ்வையும் படைத் தான். அவன் யாவற்றையும் மிகைத்தவன், ஞானமிக்கவன். (67:2)
இவ்வுலக வாழ்வு நிரந்தரமற்றது. மறுஉலகவாழ்வே நிரந்தரமானது. மறுமை வாழ்வின் வெற்றி தோல்வியை தீர் மானிக்கும் களமாகவே இவ்வுலக வாழ்வு அமைக்கப் பட்டுள்ளது. எனவே இது ஒரு சோதனை களம்.
சுவனத்தில் வாழ்வேண்டிய நாம் ஷைத்தானின் சூழ்ச்சி காரணமாக சுவனத்திலிருந்து இறக்கப்பட்டு பூமியில் வாழ வைக்கப்பட்டோம்.
நபி ஆதம் (அலை) ஹவ்வா (அலை) ஆகிய இருவரை யும் சுவனத்திலிருந்து அல்லாஹ் இறக்கும் போது
قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
“நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கி விடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். என்னுடைய நேர்வழியை யார் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் என்று கூறினோம் (2:38)
قَالَ فِيهَا تَحْيَوْنَ وَفِيهَا تَمُوتُونَ وَمِنْهَا تُخْرَجُونَ
மேலும் “உங்களுக்கு பூமியில்ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும் வாழ்க்கை வசதியும் உள்ளன. அதிலேயே வாழ்வீர்கள் அதிலேயே மரணிப்பீரகள். அதிலிருந்தே (மீண்டும்) எழுப்பப்படுவீர்கள் என்று அல்லாஹ் கூறி னான்.(7:24.25)
ஆதம் (அலை) ஹவ்வா (அலை) பூமிக்கு இறக்கப்படும் போது இவ்வுலக வாழ்வில் வெற்றியடைவதற்கு இரண்டு விடயங்கள் குறித்து மனித சமூகத்திற்கு அல்லாஹ் கட்டளை யிட்டுள்ளதை கவனிக்க வேண்டும்.
முதலாவது, மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் அமல்கள் புரியவேண்டும் என்ற நேர்வழியை காட்டும் பொறுப்பு தன்னு டையது என்றும் எவர் அந்நேர் வழியை பின்பற்றுவாரோ அவர் கவலைப்படவோ துக்கப் படவோ மாட்டார் என்றும் அல்லாஹ் உத்தரவாத மளித்தான்.
இரண்டாவது, இந்த பூமியில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்து மரணித்தபின் உயிர் கொடுத்து எழுப்பப்படுவீர்கள். பின் விசாரிக்கப்படுவீர்கள் என்றும் எச்சரித் துள்ளான்.
அருளும் அன்பும் உடைய ரஹ்மான் மனித சமுதாயம் நேர்வழியை விட்டு சறுகுகின்ற போதெல்லாம் அவர்களுக்கு நேர்வழியை காட்டுவதற்காக நபிமார்களை அனுப்பி வஹியை அருளி தனது உத்தரவாதத்தை உறுதிப் படுத்தினான். இறுதி யாக நபி முஹம்மத் (ஸல்)அவர்களை உலக மக்களுக்கு இறு தித் தூதராக அனுப்பி இறுதி வேதமான அல்குர்ஆனை இறக்கி தன்னுடைய வழி காட்டல்களை பூரணப் படுத்தினான். இந்த அடிப்படையை இங்கு கவனமாக புரிந்து கொண்டு மேலே யுள்ள (67:2)வசனத்தை விளங்க வேண்டும்.
இவ்வசனம் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அழகிய செயலை செய்பவர் யார் என்ற பரிசோதனைக்கு ஒவ்வொருவரும் முகம் கொடுத்தே ஆக வேண்டும் என்பதை விளக்கப் படுத் துகிறது.
அழகிய செயல் என்றால் என்ன அதனை எப்படி தீர்மானிப் பது? என்பதை விளங்கிக் கொண்டால் இந்த சோதனையில் வெற்றி பெறுவது இலகுவாகிவிடும்.
இமாம் புலைல் இப்னு இயாழ்(ரஹ்) இவ்வசனத்திற்கு விளக்கம் கூறும் போது அல்லாஹ்வுக்காக இஹ்லாஸூடன் நேர்த்தியாக அமல் புரிவதாகும். நேர்த்தியாக எனும் போது நபி(ஸல்)அவர்களின் சுன்னாவின் அடிப்படையில் அமல் புரிவதாகும் என குறிப் பிடுகிறார்கள். (நூல்:தப்ஸீர் பகவி)
எனவே அழகிய செயல் என்றால் சாலிஹான அமல்கள் என பொருளாகும். வாழ்வையும் சாலிஹான அமல்களையும் அடையாளப்படுத்தி காட்டுவதற்காகவே முன் மாதரி மிக்க தூதராக நபி முஹம்மத்(ஸல்) அவர் களை அல்லாஹ் அனுப்பி வைத்தான்.
உங்களில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவு கூருவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக் கின்றது.(33:21)
அல்லாஹ்வையும் மறுமையயும் ஈமான் கொண்டு இவ் வுலக வாழ்வின் சோதனைகளில் வெற்றிப் பெற வேண்டு மானால் நபி(ஸல்)அவர்களை சகல விடயங்களிலும் முன் மாதிரியாக கொண்டு செயல்பட்டே ஆகவேண்டும். எனவே நாம் செய்கின்ற நல்லமல் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரு நிபந்தனைகள் உண்டு.
முதலாவது, இஹ்லாஸ் (உளத்தூய்மை)ஆகும். அதாவது மனிதர்களின் புகழையோ முகஸ்துதியையோ எதிர்பார்க்காது அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் எதிர் பார்த்து அவன் வழங்கும் நன்மையில் ஆதரவு வைத்து தூய்மையான எண்ணத்துடன் காரியமாற்றுவதாகும்.
இரண்டாவது, நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலை பின் பற்றுதலாகும். அதாவது நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டிய ஒரு அமலை எவ்வித கூட்டல் குறைவும் திரிபுமின்றி செய்வதோடு அவர்கள் செய்து காட்டாத எந்த வொரு அமலையும் செய்யாது விட்டு விடுதலாகும்.
இவ்விரு நிபந்தனைகளும் ஒருங்கே அமையும் போது தான் ஒரு விசுவாசியின் அமல், சாலிஹான அமலாக அங்கீகரிக் கப்படும். அந்த அமல் இம்மையிலும் மறுமையிலும் பயனுள்ள தாக அமைக்கப்படு கிறது.
அல்லாஹ் கூறுகிறான்:
فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لَا أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِنْكُمْ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى بَعْضُكُمْ مِنْ بَعْضٍ
உங்களில் ஆணாயினும். பெண்ணாயினும் நற்செயல் புரிவோரின் எச் செயலையும் நிச்சயமாக நான் வீணாக்க மாட்டேன் என அவர்களின் இரட்சகன் (அல்லாஹ்) அவர் களுக்குப் பதிலளித்தான். (3:195)
அல்லாஹ் கூறுகிறான்:
مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
ஆணோ பெண்ணோ, நம்பிக்கை கொண்ட நிலையில் நல்லறம் புரிந்தால் அவருக்கு நல்வாழ்வு அளிப்போம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக அவர்களது கூலியை நாம் அவர்களுக்கு வழங்குவோம். (16:97)
சாலிஹானஅமல்கள் புரிகின்ற விசுவாசிகளின் இம்மை மறுமை வாழ்வை நல்வாழ்வாக ஆக்கிடும் பொறுப்பினை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுள்ளதுடன் அவர்களது கூலிகள் பாது காப்பானதாகவும் இருக்கும் என்றும் வாக்குறுதி யளிக்கிறான். அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்யாவதில்லை. அவர்கள் செய்த நல்லமல்களை முன்னிறுத்தி அதன் பொருட்டால் உதவியையோ தேவையையோ கேட்டு பிரார்த் தித்தாலும் கூட அப்பிரார்த்தனையை ஏற்று தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கவும் அல்லாஹ் தயாராக இருக்கிறான். (இது வஸீலா எனவும் கூறப்படும்).
நிச்சயமாக அல்லாஹ்வுக்காக வாழ்ந்தவர்கள் அவனுக்காக வே பணியாற்றியவர்கள் அவன் தூதர் காட்டிய வழியில் நல்லறங்கள் புரிந்தவர்களின் வாழ்வின் இறுதிக் கட்ட நேரத்தில் மலக்குகளை அல்லாஹ் அனுப்பி அவர்களுக்கு சுபசோபனம் சொல்கிறான்.
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي
அமைதி பெற்ற ஆத்மாவே நீ உன் இரட்சகனிடம் திருப்தி யடைந்த நிலையிலும் திருப்திகொள்ளப்பட்ட நிலையிலும் செல்வாயாக. என் அடியார்களில் நுழைந்து கொள்வாயாக. மேலும் எனது சுவனத்திலும் நுழைந்து கொள்வாயாக. (89:27.28)
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِنْ غَفُورٍ رَحِيمٍ
நிச்சயமாக எவர்கள் எங்கள் இரட்சகன் அல்லாஹ்வே எனக் கூறி பின்னர் (அதில்) உறுதியாக இருக்கின்றார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்கி நீங்கள் அச்சப்படவும் வேண்டாம் துக்கப்படவும் வேண்டாம் உங்களுக்கு வாக்களிக் கப்பட்ட சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் பெறுங்கள் என்று கூறுவர்.(மேலும்) இவ்வுலக வாழ்கையிலும் மறுமை யிலும் நாமே உதவியாளர்கள். உங்களது மனங்கள் விரும்பு பவை உண்டு. மேலும் அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்கு உண்டு.(என்றும் கூறுவர் இது) மிக்க மன்னிப் பவனான நிகரற்ற அன்பு டையவ(னான அல்லாஹ்வி) னிடமிருந்துள்ள விருந்தா கும்.(41:30-32)
இவ்வாறான சுபசோபனத்தின் இன்னுமொரு பக்கத்தையும் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறி னார்கள்.
முஃமினான அடியான் இம்மையை விட்டு மறுமைக்கு போகும் போது (அவனது மரணத்தருவாயில்) சூரியனைப் போன்று பிரகாசமுடைய வெண் மையான முகத்துடைய மலக்குகள் வானத்திலிருந்து இறங்கு வார்கள். அவர்களிடம் சுவர்க்கத்து துணியிலான கபன் துணியும் சுவர்க்கத்து கஸ்தூரியும் இருக்கும் அவ்வடியானின் பார்வைக்கு எட்டும் தூரத்தில் அம் மலக்குகள் இருப்பார்கள். உயிரை கைப்பற்றும் மலக்கு அவ்வடியானின் தலைப்பக்கமாக உட்கார்ந்து “நல்ல ஆத்மாவே (அமைதியடைந்த ஆத்மாவே) அல்லாஹ்வின் மன்னிப்பின் பாலும் பொருத்தத்தின் பாலும் வெளியேறு வாயாக என்று கூறுவார். உடனே அவ் வடியானின் உயிர் தண்ணீர் பாத்திரத்திலிருந்து தண்ணீர் சொட்டு விழுவது போல்(எவ்வித கஷ்டமுமின்றி) வெளியேறும் அதனை அம்மலக்கு எடுத்துக் கொள்வார்;.
(இன்னுமொரு அறிவிப்பின்படி)அவ்வடியானின் உயிர் பிரிந்தவுடன் வானத்திற்கும் பூமிக்கும் இடை யிலுள்ள வான வர்களும் வானத்திலுள்ள எல்லா வானவர்களும் அவ்வாத் மாவுக்கு பிரார்த்தனை புரிவார்கள். அத்தனை வானவர்களும் தங்களுக்கு முன்னால் அவ்வாத்மாவை கொண்டு செல்லும் படி அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்பார்பார்கள்.
மலக்குல் மவ்த் அவர்களது கையில் அவ்வடியானின் உயிர் கிடைத்தவுடன் கணமும் தாமதியாது மனங்கமலும் அந்தச் சுவனத்து கபனில் அதனைப் பத்திரப்படுத்தி வைப்பார்கள். இதனையே அல்லாஹ் குர்ஆனில்
அவன் தன் அடியார்களை அடக்கியாள்பவனாக இருக்கிறான் அன்றியும் உங்கள் மீதும் பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான். உங்களில் ஒருவருக்கு மரணம் வந்து விடுமானால், நம்வானவர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தம் கடமையில் தவறுவ தில்லை.(6:61) என்று கூறுகிறான்.
அதன் பின் பூமியில் இருந்ததை விட அதிக வாசனையுடன் அவ்வுயிரை வானத்திற்கு எடுத்துச் செல்வார்கள். அதனைக் காணும் வானவர்கள் எல்லாம் இவ்வுயரிய வாசனையுடைய ஆத்மா யாருடையது என்று கேட்பார்கள். இன்னாருடைய மகன் இன்னாருடையது என்று உலகத்தில் அவனுக்கு வழங்கப்பட்ட அழகிய பெயரைக் கூறுவார்கள் முதல் வானத்திற்குச் சென்றவுடன் வழி திறக்கும் படி வானவர்கள் கேட் பார்கள். அவர்களுக்கு வழி திறக்கப்படும். இவ்வாறே ஒவ்வொரு வானத்திலும் நடைப்பெறும். ஏழாவது வானத்திற்கு அந்த ஆத்மா சென்றதும் எனது நல்லடியானின் பெயரை இல்லிய்யூன் (நன்மை செய்தோரின் பட்டியல்) எனும் ஏட்டில் எழுதுங்கள் என்று அல்லாஹ் கூறுவான்.
இல்லிய்யூன் என்பது என்னவென்று உமக்கு எது அறி வித்தது? (அல்லாஹ்விடம); நெருங்கிய (கண்ணியம் மிக்க) மலக்குகள் அதைப்பார்ப்பார்கள். (83:19-21)
அவ்வடியானின் பெயர் அதில் பதியப் பட்டவுடன் அந்த ஆத்மாவை பூமிக்கு கொண்டு செல்லுங்கள் (ஏனெனில் என்வாக்கு நிறைவேற்றப்பட வேண்டும்) பூமியிலிருந்தே படைத்தோம் பூமிக்கே மீளச்செய்வோம். பூமியிலிருந்தே மீண்டும் எழுப்புவோம். இதன் பிரகாரம் அந்த ஆத்மா கொண்டு வரப்பட்டு அவ்வடியானின் உடலில் சேர்க்கப்படும; அப்போழுது அவ்வடியான் கப்ரில் நல்லடக்கம் செய்யப்பட்டு எல்லோரும் வீடுகளுக்குத் திரும்பும் காலடி ஓசை முடிந்த பின் இரு பயங்கரமான வானவர்கள் வந்து உனது ரப்பு யார்? என்று கேட்பார்கள். அவ்வடியான் எனது ரப்பு அல்லாஹ்தான் என்று கூறுவான்
உனது மார்க்கம் என்ன? என்று கேட்பார்கள். எனது மார்க்கம் இஸ்லாம் எனக்கூறுவான். உனக்கு அனுப்பப்பட்ட இந்த மனிதர் யார்? என்று கேட்பார்கள். அவர் அல்லாஹ்வின் தூதராவார் எனக் கூறுவார் இதுபற்றி உனக்கு எப்படி தெரியும்? எனக் கேட்பார்கள். அதற்கவன் அல்லாஹ்வின் வேதத்தைப்படித்தேன். அல்லாஹ்வை விசுவாசித்தேன் அவனை உண்மைப்படுத்தினேன் என பதிலளிப்பான்.
(மீண்டும் அவனிடம்) உனது ரப்பு யார் உனது மார்க்கம் என்ன உனது நபி யார் என்று கேட்பார்கள். இதுதான் ஒரு உண்மை விசுவாசிக்கு ஏற்படும் கடைசிச் சோதனை யாகும்.எனினும் “எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். இன்னும் அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான். மேலும் அல்லாஹ் தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான் (14:27)
மலக்குகளின் கேள்விக்கு பதிலளிக்கும் போது எனது ரப்பு அல்லாஹ் எனது மார்க்கம் இஸ்லாம் எனது நபி முஹம்மத் (ஸல்) என்று பதிலளிப்பான்.
அப்பொழுது எனது அடியான் உண்மையுரைத்து விட்டான். அவருக்காகச் சுவர்க்கத்தின் விரிப்புக்களை விரித்து விடுங்கள். சுவர்க்கத்து ஆடைகளை அணிவியுங்கள். சுவர்க்கத்தின் ஒரு கதவை திறந்து விடுங்கள் என்று கூறக்கூடிய ஓசை யொன்று வானிலிருந்து வரும். சுவர்க்கத்து வாடையை அவ்வடியான் நுகர்வான். கண்பார்வை எட்டு மளவுக்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும்.
அப்போது நறுமணம் கமழ அழகிய ஆடை அணிந்த ஒரு மனிதர் அவ்வடியானிடம் வருவார். அல்லாஹ்வின் பொருத்த மும் நிலையான சுகங்களின் இருப்பிடமான சுவர்க்கத்தையும் பெற வாழ்த்துகிறேன். இதுதான் உனக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும் என்று கூறுவார்.
அந்த முஃமின் அம்மனிதரை நோக்கி உங்களுக்கும் அல்லாஹ்வின் நல் வாழ்த்து கிடைக் கட்டுமாக. “நீங்கள் யார்? உங்களின் அழகிய முகமே நற் செய்திகளைத் தருகின்றன என்று கேட்பார். “நான் தான் (நீர் உலகில் தேடிவைத்த) ஷஸாலிஹான அமல்கள்|. அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நற்செயல்கள் புரிவதில் தீவிரமும் பாவங்களை செய்வதில் தாமதமும் காட்டிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலித் தருவானாக என்று அந்த அழகிய முகத்துக்குரியவர் கூறுவார்
அதன்பின் சுவனத்து வாசலும் நரகத்து வாசலும் காண்பிக்கப்பட்டு நீஅல்லாஹ்வுக்கு வழிபடா திருந்திருந்தால் இது தான் நீ செல்லும் பாதை என்று நரகத்து வாசலை காண்பித்து விட்டு அல்லாஹ் உனக்கு இதை மாற்றி விட்டான் எனக் கூறி சுவனத்து வாசல் காண்பிக் கப்படும். சுவனத்தின் சுகபோகங்களைக் கண்டதும் அவ்வடியான் யாஅல்லாஹ்! மறுமையை சீக்கிரம் உண்டாக்கு வாயாக என்று கூறுவான். அமைதியாக இருப்பாயாக என அவனுக்கு கூறப்படும்.
இன்னுமொரு அறிவிப்பின் படி அல்லாஹ்வே! நான் பெற்றிருக்கின்ற இன்பத்தை சொல்வதற்கு என்னை என் குடும்பத்தாரிடம் அனுப்பிவை என்று அந்த முஃமின் கூறுவார். புது மாப்பிள்ளையை அவ ருக்கு விருப்பத்திற்குரியவர் எழுப்பும் வரை உறங்குவது போல் அல்லாஹ் உன்னை மறுமையில் எழுப்பும் வரை தூங்குவாயாக என்று இரு மலக்குகளும் அவருக்கு கூறுவார்கள். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஃமினுடைய இறுதி முடிவு இவ்வாறு காணப்படும். ஆனால் பாவியின் நிலையோ இதற்கு மாற்றமாக இருக்கும் என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறிய நீண்ட ஹதீஸில் காணமுடிகிறது. (நூல்: அஹ்மத் அபூதாவுத் நஸயீ ஹாகிம் இப்னுமாஜா)
ஜனாஸா ஸன்தூக்கில் வைக்கப்பட்டு அதை தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
மரணத்தின் பின் வாழ்வுக்காக செய்த நல்லமல்களின் பயன்களை உயிரை கைப்பற்றும் நேரத்திலேயும் மண்ணறையிலும் அல்லாஹ் காட்டுகிறான் என்பதை இந்த ஹதீஸகள்; தெளிவுபடுத்துகின்றன. மேலும் அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
மையத்தை மூன்று விடயங்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. அதில் இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்றே ஒன்று மட்டும் மையத்துடன் தங்கி விடுகின்றது. அவனது குடும்பம் அவனது செல்வம் அவ னது நல்லமல். இந்த மூன்றில் அவனது குடும்பமும் அவனது செல்வமும் திரும்பி விடுகிறது. அவனது அமல் மட்டும் அவனுடன் தங்கி விடுகிறது என்றார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்)
மனிதன் வாழும்போது அவனது குடும்பத்திற்காக வாழ்ந்தான் குடும்பத்திற்காக உழைத்தான். உயிர் பிரிந்ததும் அவ்விரண்டும் அவனுடன் வரப்போவதில்லை. இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வது பற்றி மனைவி மக்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பேசுவார்கள். குடும்பம் சொந்தம் பந்தம் உறவுகள் அனைத்தும் மண்ணறைவரை வரும். அதன் பின் திரும்பி விடும்.
அவன் இரவு பகலாக சிரமப்பட்டு தேடிய சொத்துக்கள் சம்பாதித்த செல்வங்கள் அனைத்தையும் கை விட்டு மூன்று கபன் துணிகளுடன் தனியாக போகிறான்.
அவனது சொத்துக்களை மனைவி மக்கள் பங்கு போட்டுக் கொள்வார்கள். உலகில் அடுத்தக் கட்ட வாழ்வைப் பற்றி அவர்கள் சிந்திப்பார்கள். காலப்போக்கில் அவனை மறந்து விடவும் கூடும். குடும்பத்திற்கு பொறுப்பாளர் ஒருவர் தேவை என்று கூட விவாதிக்கவும் கூடும். இது தான் யதார்த்தம். மரணித்த ஒருவருக்காக எப்போதும் கவலையுடனும் கண்ணீருடனும் எவரும் இருக்கப் போவதில்லை. காலப் போக்கில் நிலைமை சாதாரணமாகி விடும். இதற்கு காரணம், இறந்தவர் சென்ற பின், எஞ்சியிருப்பவர்கள் தமது வாழ்க்கையை தொடர்ந்து நடத்த வேண்டும்.
இந்த நிகழ்வு தான் மறுமையிலும் நடக்கப் போகிறது. தாய் தந்தை கணவன் மனைவி சொந்தம் பந்தம் பெற்றோர் பிள்ளை என்ற உறவைப்பற்றி எவரும் கவனி க்க மாட்டார்கள். தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்ற சுயநலத்துடனே அங்கு இருப்பார் கள். அல்லாஹ் கூறுகிறான்:,
“பயங்கர சத்தம் வந்து விட்டால் அந்த (மறுமை) நாளில் மனிதன் தன் சகோதரனையும் தன் தாயையும் தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் விட்டு விரண்டு ஓடுவான். அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் (பிறரை விட்டும்) அவனை திசை திருப்பும் காரியம் உண்டு.(80:33-37)
இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டே நடுநிலை தன் மையுடன் உலகத்திற்காகவும் மறுமைக்காகவும் வாழுமாறு இஸ்லாம் பணிக்கிறது. இது மாபெரும் சோதனை. சோதனை யில்லாமல் சுவனம் கிடைக்கப் போவதில்லை. இச்சோதனைக் காவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இதில் வெற்றி பெருவதே இறைவிசுவாசியின் இலட்சியம். இதனையே மேலே உள்ள அல்குர்ஆன் வசனம் எமக்கு உணர்த்துகிறது.
இச்சோதனையில் எம்மை என்றென்றும் காப்பாற்றப் போவது நாம் செய்யும் ஸாலிஹான நல்லமல்கள்தான். எனவே நல்லறங்கள் குறித்தே அதிகம் அக்கறை கொள்ள வேண்டும்.
நல்லமல்கள் இருவகைப்படும்.
إِنَّا نَحْنُ نُحْيِ الْمَوْتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ
நிச்சயமாக நாமே மரணித்தவர்களை உயிர்பிப்போம். அவர்கள் முற்படுத்தியவற்றையும் அவர்களது அடிச்சுவடுகளையும் நாமே பதிவு செய்கின்றோம். ஒவ்வொரு பொருளையும் தெளிவான ஏட்டில் அதை நாம் கணக்கிட்டு வைத்திருக்கிறோம். (36:12)
மனிதன் முற்படுத்துகின்ற நன்மை மற்றும் தீமைகள் பதிவு செய்யப்படுவது போல் அவன் பிறருக்கு காட்டுகின்ற நன்மை தீமைக்குமான முன்னுதாரணங்களும் பதிவு செய்யப்படுகின்றன என இவ்வசனம் குறிப்பிடுவதாக இமாம் இப்னு கஸீர் (ரஹ்) இமாம் பகவீ(ரஹ்) இமாம் குர்துபி(ரஹ்) ஆகியோர் விளக்கம் அளிக்கிறார்கள். எனவே நன்மைக்கான ஊக்குவிப்புக்களை இருவகையாக காணலாம்
1. மனிதன் தனக்காக செய்து கொள்ளுகின்ற நல்லமல்கள்.
அதாவது தொழுவது நோன்பு நோற்பது, ஸகாத் மற்றும் தர்மங்கள் கொடுப்பது போன்ற இபாதத்களுடன் தனக்கென ஸாலிஹான குடும்பத்தை உருவாக்கிக் கொள்வது. தன்னு டைய அறிவு ஆற்றல்களை மக்கள் பயனடையும் வகையில் ஈடுபடுத்திக் கொள்வதாகும்.
2. சமூகத்தின் மேம்பாட்டுக்காக செய்து கொடுக்கும் நல்லறங் கள்.
அதாவது ஏழை எளியவர்கள், அனாதைகள், விதவைகள், தேவையுடையோர் போன்றோருக்காக உதவிகள் செய்து கொடுப்பது, சமுதாய விழிப்புணர்வு காரியங்களை மேற்கொள் வது போன்றவையாகும். பின்வரும் ஹதீஸ்களைப் பாருங்கள்.
صحيح مسلم (3/ 1255(
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ.
மனிதன் மரணித்துவிட்டால் மூன்று விடயங்களைத் தவிர மற்ற அனைத்து அமல்களும் அவனை விட்டும் நின்று விடுகின்றன.
1. அவன் செய்த நிலையான தர்மம்(ஸதகதுல் ஜாரியா)
2. (மக்களுக்காக விட்டுச் செல்லும்) பயன் படும் கல்வி அறிவு
3. அவனுக்காக துஆச்செய்யும் சாலிஹான பிள்ளை (இவை களால் அவனுக்கு மரணத்திற்குப் பின், கூலி கிடைத்துக் கொண் டிருக்கும்) என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம் (1631)
سنن ابن ماجه (1/ 88)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ عِلْمًا عَلَّمَهُ وَنَشَرَهُ، وَوَلَدًا صَالِحًا تَرَكَهُ، وَمُصْحَفًا وَرَّثَهُ، أَوْ مَسْجِدًا بَنَاهُ، أَوْ بَيْتًا لِابْنِ السَّبِيلِ بَنَاهُ، أَوْ نَهْرًا أَجْرَاهُ، أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَالِهِ فِي صِحَّتِهِ وَحَيَاتِهِ، يَلْحَقُهُ مِنْ بَعْدِ مَوْتِهِ .
முஃமினின் மரணத்திற்குப் பின்னால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்பது, அவன் (மக்களுக்கு) கற்றுக் கொடுத்த கல்வி அறிவும் அதனை (மக்களிடையே) பரவச் செய்ததும், சாலிஹான குழந்தையை (அவனுக்காக பிரார்த்தனை செய்வதற்கு) விட்டுச் சென்றதும், (மக்கள் பயன்பெறுவதற்கு) (கல்வி அறிவுள்ள) ஒரு ஏட்டை (புத்தகத்தை எழுதி) விட்டு செல்வதும், பள்ளிவாசலை கட்டுவது வழிப் போக்கர்களுக்காக ஒரு மடத்தை கட்டுவது, தண்ணீர் வசதி செய்து கொடுப்பது, சுகதேகியாக ஆரோக்கியமாக வாழும் நிலையில் தனது செல்வத்திலிருந்து தர்மங்கள் செய்வதுமாகும். இதற்கான நற்கூலிகள் அவனுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா)
மஸ்ஜிதுகளை கட்டுவது, பாடசாலைகளை நிர்மாணிப்பது, புலமை பரிசில்களை வழங்குவது, ஆய்வு கூடங்களை உருவாக் குவது, சனசமூக நிலையங்களை ஸ்தாபிப்பது, புத்தக சாலை களை நிறுவுவது, அனாதை இல்லங்களை ஏற்படுத்துவது, நீர்பாசன திட்டங்களை மேற்கொள்வது, அடிப்படை வசதிகளை மேற் கொள்வது போன்ற சமூகப் பணிகளை ஆற்றுவதுடன் ஏனையோர்களை இப்பணிக்கு தூண்டுவதற்கு முன்னுதாரண மாகவும் இருக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் தனக்காகவும் பிறருக்காகவும் செயற் படுத்து கின்ற இப்பணிக்கான கூலிகள் இம்மையிலிருந்து மறுமை வரை வந்தடைந்து கொண்டிருக்கும். அவனது இவ்வுழைப்பில் சாலிஹான பிள்ளையும் உருவாக்கிட மறந்து விடவும் கூடாது. அவனுக்காக பிரார்த்திக்கக் கூடிய அவன் பெயரை சமூகத் திற்கு அடையாளப்படுத்தக்கூடிய நல்ல பிள்ளையாக வளர்த்து விட்டுச் செல்ல வேண்டும்.
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்:
(ஒருநாள்) நடுப்பகல் நேரத்தில் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது செருப்பணியாத அரை குறை ஆடையணிந்த நிர்வாணிகளான வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் கழுத்துகளில் வாட்களை தொங்க விட்டவர்களாக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும் பான்மையினர் முழர் கூட்டத்தாரைச் சேர்ந்தவர்கள். இல்லை, அவர்கள் எல்லோரும் முழர் கூட்டத் தார்கள்தான். அவர்களின் வறுமையைக் கண்ட நபி(ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது. உடனே நபி(ஸல்)அவர்கள் (ஒருவித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் நுழைந்து விட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவு விட பிலால் (ரலி) அவர்கள் பாங்கு கூறி இகாமத்தும் கூறினார்.நபி (ஸல்) தொழுது விட்டு மக்களுக்கு உரை நிகழத்தினார்கள். (அவ்வுரையில்)..
மனிதர்களே! ஒரே ஆத்மாவிலிருந்து உங்களை படைத்து அந்த ஆத்மாவிலிருந்து அதன் ஜோடியையும் படைத்து பின்னர் அவ்விருவரிலிருந்தே அதிகமான ஆண்களையும் பெண்களை யும் வெளிப்படுத்தி பரவச் செய்த உங்கள் இரட்சகனை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எவன் மூலம் உதவி பெறுவீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். மேலும் இரத்த பந்த உறவினர்களை ஆதரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்கானிப்பவனாக இருக்கின்றான்.(4:1)
இறைவிசுவாசிகளே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆத்மாவும் நாளை மறுமைக்காக எதனை முற் படுத்தி வைத்தது என்பதை கவனிக்கட்டும்.(59:18) (என்ற வசனங்களை ஓதிக் காட்டி முழர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யு மாறு கூறி னார்கள். அப்போது பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.
உடனே நபித் தோழர்கள் தம்மிடமிருந்த தீனார், திர்ஹம், ஆடை, கோதுமையில் ஒருஸாஉ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ என்ற அளவிலும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரி தோழர்களில் ஒருவர் ஒரு பை நிறைய பொருட்களை கொண்டு வந்தார். அதை தூக்க முடியாது அவரது கை திணறியது. ஏன், அவரால் அதை தூக்கவே முடியவில்லை.
தொடர்ந்தும் மக்கள் தங்களின் தர்மப் பொருட்களுடன் வந்து கொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் பொன் னைப் போன்று மின்னிக் கொண்டிருந்ததையும் நான் கண்டேன். அப்போது நபி(ஸல்)அவர்கள் யார் இஸ்லாத்தில் ஓரு அழகிய நடை முறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன் படி செயற்படு பவர்களின் நன்மையும் உண்டு. அதற்காக அவர்களது நன்மை யில் எதுவும் குறைந்து விடாது.
அவ்வாறே யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய பாவமும் அவருக் குப்பின் அதன்படி செயற்படுபவர்களின் பாவமும் அதன் படி செயற் பட்டவர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம.1017)
ஒரு முஸ்லிம் சிறந்த வழிகாட்டியாக இருந்து சுயநலமின்றி பொது நலன்காக்கும் வகையில் வாழவேண்டும் என்ற இலட்சிய மனப்பான்மையை அல்லாஹ்வுடைய தூதர் நபிமுஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
எவர் இஸ்லாத்தில் ஓரு அழகிய பணியை செய்து மற்றவருக்கும் தூண்டுதலாக இருக்கிறாரோ அவருக்கான கூலி கிடைப்பது போல் அந்த அழகிய பணியினை மேற்கொண்ட வரின் நன்மையும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும் என்று என்று நபியவர்கள் ஆர்வமூட்டினார்கள். எனவே இந்த வட்டத்தை விட்டும் முஸ்லிம் ஒதுங்கி வாழக் கூடாது.
பின்தொடரும் நல்லறங்கள்.
PART.03
எம்.எஸ்.எம்.இம்தியாஸ் யூசுப் ஸலபி
மரணித்தவருக்காகப் பயனளிக்கும் காரியங்கள்
தாய் தந்தை மற்றும் குடும்ப அங்கத்தவர் ஒருவர் மரணித்த பின் அவரை குளிப்பாட்டி கபன் செய்து தொழுகை நடாத்தி நல்லடக்கம் வரை மேற் கொள்கின்ற காரியங்களுடன் எமது கடமைகள் முடி வடைந்து விடுவதில்லை.
மரணித்தவருக்காக செய்ய வேண்டிய மேலும் சில கடமைகளும் உண்டு. அவைகளைப்பற்றி இனி கவனிப்போம்.
கடனை நிறைவேற்றுதல்
பெற்றோர் மற்றும் சொந்தக்காரர் கடனாளியாக மரணித் துள்ளாரா? அது பற்றி ஏதும் அறிவித்து விட்டு சென்றார்களா? என்பதை கவனிக்க வேண்டும். கடனாளிகளாக இருப்பின் முதலில் கடனை அடைப்பதற்கு அவசரம் காட்ட வேண்டும். கடனை ஒப்படைக்காது மரணிப்பது பாவமாகும்.
مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ
(மரணித்தவரின் சொத்துக்களை பங்கு வைக்கு முன்) அவருடைய கடனையும் வஸீயத்தையும் நிiவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். (பார்க்க 4:11)
அல்லாஹ்வுடைய தூதர் ஜனாஸா தொழுகையை நடத்துமுன் அந்த ஜனாஸா கடனாளியாக மரணித்துள்ளதா என்பதை விசாரித்துள்ளார்கள் என்பதை ஹதீஸ்கள் கூறுகின்றன.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. கொண்டு வந்தவர்கள் நபி (ஸல்) அவர்களை தொழுவிக்கும்படி கூறினார்கள். இவருக்கு ஏதேனும் கடன் உண்டா என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இல்லை என கூறப்பட்டது. ஏதாவது விட்டுச் சென்றுள்ளாரா? என நபி(ஸல்) அவர்கள் மீண்டும் கேட்டார்கள். இல்லை எனக் கூறப்படடது. அப்போது அந்த ஜனாஸாவுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடாத்தினார்கள்.
அதன் பின் இன்னுமொரு ஜனாஸா கொண்டு வரப் பட்டது. தொழுகை நடாத்தும்படி நபி(ஸல்) அவர்களை வேண்டினார்கள். இவருக்கு கடன் ஏதும் உண்டா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் எனக் கூறப்பட்டது. ஏதேனும் விட்டுச் சென்றுள்ளாரா? என நபி(ஸல்)அவர்கள் கேட்டார்கள். மூன்று தீனார்களை விட்டுச் சென்றுள்ளார் என பதிலளிக்கப் பட்டதும் அந்த ஜனாஸாவுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடாத்தி னார்கள்.
அதன் பின் இன்னுமொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்களை தொழுகை நடாத்தும் படி வேண்டினார்கள். இவர் ஏதேனும் விட்டுச் சென்றுள்ளாரா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் இல்லை என பதிலளித்தார்கள். இவருக்கு ஏதேனும் கடன் உண்டா? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் மூன்று தீனார்கள் கடன் உண்டு என பதிலளித்தார்கள். (கடனாளிக்கு தொழுகை நடாத்தாமல்) உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடாத்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே (அங்கிருந்த அபூ கதாதா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நான் அக்கடனை பொறுப்பேற்கிறேன். இவருக்கு நீங்கள் தொழுகை நடாத்துங்கள் எனக் கேட்டுக் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு தொழுகை நடாத்தினார்கள். (அறிவிப்பவர்: சலமதிப்னுல் அக்வா (ரழி) (நூல்: புகாரி, அஹ்மத், நஸயீ திர்மிதி).
பாவமன்னிப்பு த் தேடுதல்
எங்களுக்கு முன் மரணித்த முஸ்லிமான முஃமினான ஆண் பெண்களுக்கு பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தனைச் செய்யும் பழக்கத்தை எப்போதும் கடை பிடிக்க வேண்டும்.
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ
எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்களை முந்திச் சென்று ஈமான் கொண்ட சகோதரர்களுக்கும் மன்னிப்பை அருள்வாயாக (59:10)
குறிப்பாக பெற்றோருக்காக மன்னிப்புக் கோருவதற்கு மறந்து விடக்கூடாது. எம்மை பெற்றெடுத்தது முதல் ஆளாக்குகின்ற வரை எமது அசுத்தங்களை சுத்தப்படுத்தி எமக்காகவே கஷ்டப்பட்டு உழைத்தவர்கள். எமது சந்தோசங்களுக்காக தங்களுடைய சுகதுக்கங்களை துறந்தவர்கள். நாம் தூங்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கண் விழித்தவர்கள். நாம் வயிறார உண்ண வேண்டும் என்பதற்காக பசியோடு நாட்களை கடத்தியவர்கள். கோழி தன் குஞ்சுகளை அரவணைப்பதைப் போல் எம்மை அரவணைத்து போஷித்தவர்கள். எனவே அவர் களுக்காக பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் அருளை வேண்டி கப்ருடைய வேதனை நரக வேதனை மற்றும் மறுமை வாழ்வின் சோதனையை விட் டும் பாதுகாத்து சுவனத்தில் சேர்த்து விடுமாறு எப்போதும் இஹ்லாசுடன் பிரார்த்திக்க வேண்டும்.
எம்மை படைத்த ரப்புக்கும் எம்மை பெற்றெடுத்த பெற் றோருக்கும் நன்றி செலுத்த மறந்துவிடக் கூடாது. பெற்றோருக் கான பிரார்த்தனை செய்யும் முறையினை அல்லாஹ் பின்வரு மாறு கற்றுத் தருகிறான்.
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
எங்கள் இரட்சகனே! எனது பாவத்தையும் எனது பெற்றோ ரினதும் முஃமின்களினதும் பாவங்களை (மறுமை) விசாரணை யுடைய நாளில் மன்னிப்பாயாக. (14:41)
وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
என் இரட்சகனே! நான் சிறுவனாக இருந்தபோது (என் பெற் றோராகிய) அவ்விருவரும் என்னைப் பராமரித்தது போன்று அவ்விருவருக்கும் நீ கருணை புரிவாயாக எனக் கூறுவீராக. (17:24)
பெற்றோருக்காகக் நாம் கோரும் பாவமன்னிப்பினால் அவர் களுடைய அந்தஸ்து உயர்த்தப்படுகிறது.
(سنن ابن ماجه (2 1207
عَنْ أَبِي هُرَيْرَةَ، وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ فَيَقُولُ: أَنَّى هَذَا؟ فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ '
மனிதனின் அந்தஸ்த்து சுவனத்தில் உயர்த்தப்படும். அப்போது அவன் எவ்வாறு இது கிடைத்தது என்று கேட்பான். உன் பிள்ளை உனக்காக பாவமன்னிப்புக் கோரியதால் கிடைத்த அந்தஸ்தாகும் என கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: இப்னு மாஜா)
சுவனத்தில் எமது பெற்றோரினது அந்தஸ்து உயர்வதற்காக வாழ்நாள் முழுவதும் -ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் –பிரார்த்திப் பதற்கு நாம் மறந்துவிடக்கூடாது.
தர்மம் செய்தல்:
பெற்றோரர்களுக்காக சொந்தங்களுக்காக - அவர்களுடைய பெயரால்- தர்மங்கள் செய்திடும் போது அவர்களுடைய பாவங் கள் மன்னிக்கப்படுகிறது
صحيح مسلم (3ஃ 1254)
عَنْ عَائِشَةَ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ أُمِّيَ افْتُلِتَتْ نَفْسُهَا وَلَمْ تُوصِ، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، أَفَلَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا، قَالَ: «نَعَمْ»،
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனது தாய் வஸீயத் செய்யாத நிலையில் மரணித்து விட்டார். அவர், (மரணத்தரு வாயில்) பேசியிருந்தால் தர்மம் (ஸதகா) செய்யும் படி கூறியிருப்பார் என நம்புகிறேன். நான் அவருக்காக தர்மம் செய்தால் அதன் நன்மை அவருக்கு கிடைக்குமா? எனக் கேட் டார். நபி (ஸல்) அவர்கள் ஆம். (நன்மை கிடைக்கும்) எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
(صحيح مسلم (3ஃ 1254
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَبِي مَاتَ وَتَرَكَ مَالًا، وَلَمْ يُوصِ، فَهَلْ يُكَفِّرُ عَنْهُ أَنْ أَتَصَدَّقَ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ»
எனது தந்தை வசிய்யத் எதுவும் செய்யாமல் சொத்தை விட்டு விட்டு இறந்து விட்டார். அவருக்காக நான் அதை தர்மம் செய்தால் அவரது குற்றங்களுக்கு பரிகாரமாக அமையுமா? என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்க அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்” எனக் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா(ரலி) ஆதாரம்: முஸ்லிம்
سنن أبي داود (3ஃ 118)
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ أَفَيَنْفَعُهَا إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ فَقَالَ: «نَعَمْ». قَالَ: فَإِنَّ لِي مَخْرَفًا، وَإِنِّي أُشْهِدُكَ أَنِّي قَدْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا
ஒருமனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ் வின் தூதரே! எனது தாய் மரணித்து விட்டார். என் தாய்க்காக தர்மம் செய்தால் பயனளிக்குமா எனக் கேட்டார். அப்போது அல்லாஹ் வின் தூதர்அவர்கள் ஆம் என கூறினார்கள். எனக்கு ஒரு தோட்டம் இருக்கிறது. என் தாய்க்காக அதனை தர்மம் செய்தேன் என்பதற்கு உங்களை சாட்சியாக வைக்கிறேன் என அம்மனிதர் கூறினார். அறிவிப்பவர். இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவுத்
பொது வசதி செய்து கொடுத்தல்:-
மரணித்தவரின் பெயரால் பொது மக்களின் உபயோகத்திற்காக வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை பார்க்கிறோம். உதாரணமாக (Memorial Hall) ஞாபகார்த்த கட்டடம், பஸ் நிலையம் நிர்மானித்தல் வைத்திய உபகரணங்கள் கையளித்தல் போன்றவை குறிப்பிடலாம். இதுபோன்ற பொது சேவைகள் மூலம் சமூகம் நன்மை அடைகிறது. அல்லாஹ்வுடைய தூதர் பொதுத்திட்டங்களை அன்றே இந்த உம்மத்திற்கு அறிமுகப் படுத்தினார்கள். பின்வரும் ஹதீஸிலிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதியை மரணித்தவரின் பெயரால் செய்து கொடுக்க கட்டளையிடுகிறார்கள்
صحيح ابن خزيمة (4-123)
عَنْ سَعْدٍ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ فَقَالَ: «نَعَمْ» ، فَقُلْتُ: أَيُّ صَدَقَةٍ أَفْضَلُ؟ قَالَ: «إِسْقَاءُ الْمَاءِ»
ஸஃதுப்னு உபாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதரே எனது தாய் மரணித்து விட்டார்கள். அவருக்காக தர்மம் செய்யட்டுமா எனக் கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஆம் எனக் கூறினார்கள். தர்மத்தில் சிறந்தது எது எனக் கேட்டேன். நீர் புகட்டுதல் என நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: இப்னு குஸைமா)
நோன்பு நோற்றல்:-
மரணித்தவர் உயிருடன் இருக்கும் போது ரமழான் கால நோன்பு நோற்க இயலாத நிலையில் அதற்காக பித்யா கொடுக் காதவராக மரணித்திருந்தால் அவர் சார்ப்பாக அந்நோன்பை பிள்ளைகள் கழா செய்ய வேண்டும். அவ்வாறே ஏதும் ஒரு காரணத்திற்காக நோன்பு நோற்பதாக நேர்சசை செய்திருந்து அந்நோன்பை நோற்காதவராக மரணித்திருந்தாலும் பிள்ளைகள் அந்நோன்பை நோற்க வேண்டும் عَنِ ابْنِ
عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً أَتَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، فَقَالَ: «أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتِ تَقْضِينَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ: «فَدَيْنُ اللهِ أَحَقُّ بِالْقَضَاءِ»
அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாதகால நோன்பு கடமை யான நிலையில் என் தாய் மரணித்துவிட்டார். அதை அவர் சார்ப்பாக நான் நிறைவேற்றலாமா? என்று ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உன் தாயாருக்கு கடன் இருந்தால் அதை நிறைவேற்றத்தானே செய்வாய்? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் “ஆம்!” என்றார். “அவ்வாறானால் அல்லாஹ்வின் கடனை நிறை வேற்று கடன்களை நிறைவேற்ற அவன் மிகத் தகுதியானவன்” என நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)
صحيح البخاري ( 3 - 35)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ
நோன்பு கடமையான நிலையில் மரணித்தால் அவர் சார்பாக அவருடைய பொறுப்புத்தாரி அதனை நிறைவேற்ற வேண்டும என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (நூல் புகாரி)
ஹஜ் மற்றும் உம்ரா செய்தல்:
உயிருடன் இருக்கும் பெற்றோர் ஹஜ் செய்ய சக்தியற்ற வர்களாக இருந்தால் அவர்கள் சார்ப்பாக பிள்ளைகள் ஹஜ் மற்றும் உம்ரா செய்யலாம். பிள்ளைகள் முதலில் தங்களுக்காக ஹஜ், உம்ரா செய்யவேண்டும். அதன் பின் (உயிருடன் இருக்கும் அல்லது மரணித்திருக்கும்) குடும்ப அங்கத்தினர் மற்றும் பெற்றோருக்காக செய்ய வேண்டும்.
صحيح البخاري (8- 142)
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ: إِنَّ أُخْتِي قَدْ نَذَرَتْ أَنْ تَحُجَّ، وَإِنَّهَا مَاتَتْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ» قَالَ: نَعَمْ، قَالَ: «فَاقْضِ اللَّهَ، فَهُوَ أَحَقُّ بِالقَضَاءِ»
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து என்னுடைய சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தார். (ஆனால் ஹஜ்ஜு செய்யாது) மரணித்து விட்டார். எனக் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உனது சகோதரிக்கு கடன் இருந்தால் அதை நீ நிறை வேற்றுவாயா? கேட்க அவர் ஆம்! நிறை வேற்றுவேன் எனக் கூறினார். அப்படியாயின் அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று. கடன்களை நிறைவேற்றுவதற்கு அவனே மிகத் தகுதியானவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார். (ஆதாரம்: புகாரி (6699)
صحيح البخاري (3 - 18)
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً؟ اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالوَفَاءِ»
ஜுஹைனா கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து “எனது தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். ஹஜ் செய்யவில்லை மரணித்து விட்டார். அவருக்காக நான் ஹஜ் செய்யட்டுமா?” எனக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் “உன் தாய்க்கு கடனிருந்தால் அதனை நீ நிறை வேற்றுவாய்தானே. அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று. கடனை நிறைவேற்றுவதற்கு அவனே மிகத் தகுதியானவன்” எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) (நூல்; புகாரி)
صحيح البخاري (3- 18)
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: جَاءَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ عَامَ حَجَّةِ الوَدَاعِ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لاَ يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ فَهَلْ يَقْضِي عَنْهُ أَنْ أَحُجَّ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ
கஷ்ஹம் எனும் கோத்திரத்தை சேர்ந்த பெண்மணியொருவர் நபி(ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது வந்து “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள் மீது ஹஜ்ஜை கடமையாக்கியுள்ளான். எனது தந்தை வயது முதிர்ந்தவர். வாகனத்தில் ஏறி உட்காருவதற்கு அவருக்கு முடியாது. அவருக்காக நான் ஹஜ்ஜை நிறைவேற்றலாமா?” எனக் கேட்டார். அதற்கு அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) (நூல்: புகாரி)
سنن أبي داود (2- 162)
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ: لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ، قَالَ: «مَنْ شُبْرُمَةُ؟» قَالَ: أَخٌ لِي - أَوْ قَرِيبٌ لِي - قَالَ: «حَجَجْتَ عَنْ نَفْسِكَ؟» قَالَ: لَا، قَالَ: «حُجَّ عَنْ نَفْسِكَ ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ»
ஒருமனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ஷுப்ருமா வுக்காக ஹஜ் செய்ய தல்பியா கூறியுள்ளேன் எனறு கூறினார். யார் அந்த ஷுப்ரமா? என நபியவர்கள் கேட்டார்கள். அவர் எனது சகோதரர் அல்லது நெருங்கிய உறவினர் என்றார். “உனக்காக நீ ஹஜ் செய்துள்ளாயா?” என நபியவர்கள் கேட்ட போது அவர் இல்லை என்றார். (முதலில்) உனக்காக ஹஜ் செய். பிறகு ஷுப்ருமாவுக்கு ஹஜ் செய் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) (நூல்: அபூதாவுத்;)
நேர்ச்சையை நிறைவேற்றல்:-
அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் அனுமதித்த விடயங்களில் ஒருவர் நேரச்சை செய்து அதனை நிறை வேற்றமுன் மரணித்தால் மட்டுமே அந்நேரச்சையை நிறைவேற்ற வேண்டும். கப்றுக்கு போர்வை போர்த்துவேன், எண்ணெய் ஊற்றுவேன், கந்தூரி கொடுப்பேன், தர்காவை எழு முறை சுற்றி வருவேன் என்று நேர்ச்சை செய்தால் அதனை நிறைவேற்றுவது கடமையல்ல. அல்லாஹ்வுக்கும் அவனது தூதரின் வழிமுறைக்கும் மாற்றமான முறையில் இந்நேர்ச்சைகள் இருப்பதனால் நிறை வேற்ற வேண்டியதில்லை.
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: اسْتَفْتَى سَعْدُ بْنُ عُبَادَةَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ، تُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَاقْضِهِ عَنْهَا»،
எனது தாயார் மீது ஒரு நேர்ச்சை இருந்தது. அதை நிறைவேற்ற முன், மரணித்து விட்டார்கள். (என்ன செய்யலாம் என்று) ஸஃது இப்னு உபதா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் பத்வா கேட்டார்கள். அதை நிறைவேற்றும்படி நபி (ஸல்) தீர்ப்பளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (ஆதாரம்: புகாரி (6698)
سنن أبي داود 3- 237)
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةً رَكِبَتِ الْبَحْرَ فَنَذَرَتْ إِنْ نَجَّاهَا اللَّهُ أَنْ تَصُومَ شَهْرًا، فَنَجَّاهَا اللَّهُ، فَلَمْ تَصُمْ حَتَّى مَاتَتْ فَجَاءَتْ، ابْنَتُهَا أَوْ أُخْتُهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَمَرَهَا أَنْ تَصُومَ عَنْهَا»
ஒரு பெண் கடலில் பயணிக்கும் போது அல்லாஹ் என்னை காப்பாற்றினால் ஒரு மாதக் காலம் நோன்பு நோற்பேன் என நேர்ச்சை செய்தார். அல்லாஹ் அப்பயணத்தில் அப்பெண்ணை காப்பாற்றினான. மரணிக்கும் வரை அந்நோன்பை அவர் நோற்க வில்லை. இந்நிலையில் அப்பெண்ணுடைய மகள் அல்லது சகோதரி நபி(ஸல்) அவர்களிடம் வந்து விளக்கம் கேட்டார். அப்போது நபியவர்கள் அப்பெண்சார்ப்பாக அந்நோன்பை நோற்குமாறு ஏவினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) (ஆதாரம் அபூதாவுத்)
குடும்ப உறவை பேணிக் கொள்ளல்.
குடும்பத்துடனான உறவையும் மவ்தாக்கி விடக்கூடாது. அவ்வாறே தாய் தந்தை மரணித்து விட்டால் அவர்களுடைய சொந்த பந்த உறவுகளை அறுத்து விடக்கூடாது. பெற்றோருடைய நண்பர்களைக் கண்டால் தங்களது பெற்றோருக்கு செலுத்தும் மரியாதையை அவர்களுக்கும் கொடுத்து அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும்.
صحيح مسلم (4/ 1979)
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَجُلًا مِنَ الْأَعْرَابِ لَقِيَهُ بِطَرِيقِ مَكَّةَ، فَسَلَّمَ عَلَيْهِ عَبْدُ اللهِ، وَحَمَلَهُ عَلَى حِمَارٍ كَانَ يَرْكَبُهُ. وَأَعْطَاهُ عِمَامَةً، كَانَتْ عَلَى رَأْسِهِ فَقَالَ ابْنُ دِينَارٍ: فَقُلْنَا لَهُ: أَصْلَحَكَ اللهُ إِنَّهُمُ الْأَعْرَابُ وَإِنَّهُمْ يَرْضَوْنَ بِالْيَسِيرِ، فَقَالَ عَبْدُ اللهِ: إِنَّ أَبَا هَذَا كَانَ وُدًّا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ أَهْلَ وُدِّ أَبِيهِ»
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) மக்கா செல்லும் வழியில் கிராமவாசிகளில் ஒருவரை சந்தித்த போது அவருக்கு ஸலாம் கூறி அவரைத் தாக் பயணம் செய்து வந்த கழுதையில் ஏற்றிக் கொண்டார்கள். மேலும் அவருக்கு தமது தலைமீதிருந்த தலை பாகையை(கழற்றி)க் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் அவர்களிடம் அல்லாஹ் உங்களைச் சீராக்கட்டும். இவர்கள் கிராம வாசிகள். இவர்களுக்கு சொற்ப அளவு கொடுத்தாலே திருப்தியடைந்து விடுவார்கள் என்று கூறினோம். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், இவருடைய தந்தை (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் அன்புக்குரிய வராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நல்லறங்களில் மிகவும் சிறந்தது ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் எனக் கூறினார்கள். (நூல்- முஸ்லிம்)
صحيح البخاري (5/ 38)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: مَا غِرْتُ [ص:39] عَلَى أَحَدٍ مِنْ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ، وَمَا رَأَيْتُهَا، وَلَكِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ ذِكْرَهَا، وَرُبَّمَا ذَبَحَ الشَّاةَ ثُمَّ يُقَطِّعُهَا أَعْضَاءً، ثُمَّ يَبْعَثُهَا فِي صَدَائِقِ خَدِيجَةَ، فَرُبَّمَا قُلْتُ لَهُ: كَأَنَّهُ لَمْ يَكُنْ فِي الدُّنْيَا امْرَأَةٌ إِلَّا خَدِيجَةُ، فَيَقُولُ «إِنَّهَا كَانَتْ، وَكَانَتْ، وَكَانَ لِي مِنْهَا وَلَدٌ
நபி(ஸல்) அவர்கள் (மரணித்த தனது மனைவியான) கதீஜா (ரலி) அவரகளை அதிகம் நினைவு கூருவோராக இருந்தார்கள். சில சமயங்களில் ஆடு அறுத்தால் அதனை பல துண்டுகளாக்கி கதீஜா (ரலி) அவர்களின் தோழிகளுக்கும் அனுப்பிவைப்பார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் (நூல்:புகாரி)
கத்தம் பாத்திஹா
சகோதரர்களே! இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் மரணித்துப் போன எமது பெற்றோர் மற்றும் குடும்ப அங்கத்தி னர்கள் மீது நாம் கவனம் செலுத்தியுள்ளோமா என்பதை தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.
சஹாபாக்கள் நபியவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்களை எமது முஸ்லிம் குடும்பங்கள் கற்றுக் கொண்டுள்ளனவா என்பதையும் கவனித்துப் பாருங்கள்.
மையத்து வீட்டுகாரர்கள் பெரும் கவலையிலும் சோகத்திலும் மூழ்கி இருக்கும் போது கத்தம் பாதிஹாவுக்காக ஆயிரக்கணக்கில் கடன் பட்டு வாய்க்கு ருசியாக பண்டங்களையும் சாப்பாடு களையும் சமைத்துப் போடுகிறார்கள்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது அங்கு வரக் கூடியவர்கள் துயரத்தில் இருக்கும் மையத்து வீட்டுக்காரர்களுக்கு சமைத்து கொடுத்து ஆறுதல் சொல்லுவதை விட்டு அங்குள்ளவர்களிடம் சாப்படு எடுத்து சாப்பிடுவது எந்த வகையில் நியாயம்? குடிசை தீ பற்றி எரியும் போது சுருட்டு பற்ற வைக்க நெருப்பு கேட்ட கதை மாதிரி இருக்கிறது. இந்த விஷயத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம் அல்லத மக்கள் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள்.
سنن ابن ماجه (1/ 514)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ: لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا، فَقَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ، أَوْ أَمْرٌ يَشْغَلُهُمْ»
ஜஃபர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு தெரிவித்தபோது ஜஃபரின் வீட்டாருக்கு அவர்களை கவலைக்குள்ளாக்கும் செய்தி வந்துள்ளது. எனவே, ஜஃபரின் குடும்பத்தாருக்கு உணவு சமைத்துக் கொடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரலி) நூல்: அபூதாவுத் இப்னுமாஜா)
எமது அண்டை வீட்டார் மரணித்த போது ஒரு நாள்வது இப்படியான ஒரு சுன்னத்தான காரியத்தை செய்து ஆறுதல் சொல்லி யிருக்கிறோமா? சிந்தித்துப் பாருங்கள்.
மரணித்தவருக்காக கத்தம் பாதிஹா ஓதி ராதிபு வைத்து மவ்லிது ஓதி சாப்பாடு போடுவதும் 3, 7, 15, 20, 30, 40, 60 கத்தம் கொடுப்பதும் வருடத்திற்கு ஒரு கத்தம் கொடுப்பதும் சுன்னத் என்றால் அந்த மேலான சுன்னத்தை நபிமுஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு காண்பிக்காமல் போவார்களா?
இந்த வானத்திற்கு கீழால் பூமிக்கு மேலால் அல்லாஹ்வின் தீனை நடைமுறைப்படுத்தி வாழ்ந்த சிறந்த சமுதாயம் சஹாபா சமுதாயம் தான். சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப் பட்ட அந்த சமுதாயத்தில் - நபி (ஸல்) அவர்கள் ஹயாத்துடன் இருக்கும் போது- கத்தம் பாதிஹாவை நடை முறை படுத்தி இருக்க வில்லை என்றால் அவர்களுக்கு பின்னால் வந்த நீங்கள் ஏன் அஞ்சவேண்டும். சிரமப்பட வேண்டும்.
சகோதரர்களே! நரகத்தை விட்டும் தூரமாக்கி சுவனத்தின் பால் இட்டுச் செல்வதற்கு வழிகாட்டியாக வந்தவர் தான் அல்லாஹ்வின் இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள். அவர்களை உண்மையாக ஈமான் கொண்ட மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறை போதுமானது.
எனவே உங்கள் பணத்தையும் நேரத்தையும் வீண்விரயமாக் காது பெற்றோர் மற்றும் உறவினர்களின் பெயரில் தர்மங்கள் செய்யுங்கள். சமூகத்திற்கும் நாட்டுக்கும் பயனுள்ள காரியங்களை செய்ய முன் வாருங்கள். எந்த சந்தேகங்களும் இல்லாது மறுமை வரை அவர்களுக்கு நன்மை போய்கொண்டே இருக்கும்.
குறிப்பு: சகோதரர்களே மரணித்தவரின் பெயரால் யாஸீன் சூரா அல்லது மன்ஸில்கள் வினியோகிக்கப்படுகிறது. தூசு தட்டுதற்கு ஆளில்லாமல் அவை பள்ளிவாசல்களில் நிறைந்து கிடக்கிறது. இதை விட ஓதுவதற்கும் படிப்பதற்கும் வசதியில்லாத பிள்ளைகளுக்கு குர்ஆன் மற்றும் புத்தகங்கள் பாடசாலை உபகரணங்களை வாங்கிக் கொடுங்கள். அவை மிகவும் பிரயோசனமாக இருக்கும்.