الوصف
مقالة باللغة التاميلية، تحتوي على العناصر التالية: 1. على من يجب الصوم؟ 2. واجبات الصوم. 3. نواقض الصوم. 4. طريقة تحديد وقت الإمساك والإفطار في البلدان التي يمتد الليل أو النهار فيها.
நோன்பின் சட்டங்கள் -1
] Tamil – தமிழ் –[تاميلي
முஹம்மத் மக்தூம் பின் அப்துல் ஜப்பார்
2014 - 1435
أحكام الصيام
« باللغة التاميلية »
محمد مخدوم بن عبد الجبار
2014 - 1435
நோன்பின் சட்டங்கள் -1
A.J.M மக்தூம்
7. பருவ வயதை அடையாத குழந்தைகள், வயோதிபம், பைத்தி யம் போன்றவற்றின் மூலம் பகுத்தறிவை இழந்தவர்கள் போன்றோரின் மீது நோன்பு கடமையில்லை.
10. பாரிய ஆபத்தில் மாட்டிக் கொண்ட ஒருவரை காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டு உடல் தெம்பு பெற்றால் தான் முடியுமாக இருந்தால் அச்சந்தர்ப்பத்தில் நோன்பை விட அனுமதியுள்ளது.
நோன்பின் சட்டங்கள் - 2
A.J.M மக்தூம்
நீண்ட பகல் உள்ள நாட்களில் நோன்பு நோற்பது எப்படி?
நோன்பு என்பது ஃபஜ்ர் உதயமானதிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களில் இருந்து விலகி இருப்பதாகும். இதுவே இஸ்லாம் நிர்ணயித்துள்ள கால எல்லையாகும். இது அனைத்து நாடுகளில் வசிப்பவர்களுக்கும் பொதுவானதாகும். பகல் மற்றும் இரவு நேரங்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டுக்கு வித்தியாசமானதாகவே இருக்கும். குறிப்பிட்ட சில பகுதிகளில் குளிர் காலத்தில் பகல் நேரம் மிகவும் குறைவானதாக இருக்கும் அதே நேரத்தில் கோடைக் காலத்தில் பகல் மிக மிக அதிகமாகவும் இருக்கும். இப்படியான பகுதிகளில் உள்ளவர்கள் குளிர் காலத்தில் ரமழானை அடைந்தால் மிகவும் எளிதாக இருப்பது போன்றே கோடைக் காலத்தில் கடும் சிரமத்தை எதிர்நோக்குவர்.
இங்கே பகல் காலம் கூடுதல், குறைவாக அமைவதை பொருட்படுத்தப் படமாட்டாது. இறைவனோ, இறைத் தூதரோ அப்படியான தோர் விதி விலக்கை குறிப்பிடவும் இல்லை. எனவே ஃபஜ்ர் உதயமாகுவது மற்றும் சூரியன் மறைவதின் மூலம் இரவையும், பகலையும் பிரித்தறியும் நிலை இருந்தால் அதனைப் பின்பற்றி பகல் காலங்களில் நோன்பு நோற்பது அவசியமாகும்.
இறைவன் அல் குர்ஆனில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளான்:
இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் (அல் குர்ஆன் 2:187)
இறைத்தூதர் அவர்கள் (ஸல்) கூறினார்கள். "இரவு முன்னோக்கி, பகல் பின்னோக்கி சென்று, சூரியன் மறைந்து விட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும" (புகாரி, முஸ்லிம்)
அனுபவத்தின் மூலமோ, நம்பத்தகுந்த வைத்தியர் ஒருவரின் அறிவுறுத்தலுக்கு அமையவோ நோய் அல்லது வேறேதேனும் பாதிப்புக்கள் ஏற்படும் என்பதனால் நீண்ட நாள் நோன்பை பூர்த்தி செய்ய முடியாத நிலை இருந்தால் அதனை பிறகு ஏதேனும் ஒரு நாளில் கழா செய்து கொள்ளலாம்.
அல் குர்ஆனில் இறைவன் பின்வரு மாறு குறிப்பிடுறான்:
ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் தவற விட்ட நோன்புகளை) வேறு நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல் குர்ஆன் 2:185)
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. (அல் குர்ஆன் 2:286)
சிரமத்துடன் நோற்கும் நோன்புக்கு அதற்கேற்ப இறைவனே அளவின்றி கூலி வழங்கும் பொறுப்பை தன் கையில் வைத்துள்ளான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நோன்பு அளவில்லாத நன்மைகளைப் பெற்றுத் தரும் நல்லறம் என்பதால் சிறு, சிறு கஷ்டங்களுக்காக அந்த உயரிய வணக்கத்தை உதாசீனம் செய்து நன்மைகளை இழந்த துர்பாக்கிய நிலைக்கு நாம் ஆளாகி விடாமல் தற்காத்துக் கொள்வதும் அவசியமாகும்.
பல மாதங்களுக்கு சூரியன் உதிக்காத, அல்லது மறையாத பிரதேசங்களில் வசிப்பவர்கள் ஒரு நாளை 24 மணித்தி யாலங்களாக மதிப்பிட்டு அவர்க ளுக்கு அண்மையில் உள்ள ஒரு பிரதேசத்தின் மதிப்பீட்டுக்கு அமைய தொழுகை மற்றும் நோன்பை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். (அல்லாஹ்வே நன்கறிந்தவன்)